Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

பணகுடி அருகே - யானை மர்ம மரணம் :

பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் மலையடிவாரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த யானை.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் மலையடிவாரத்தில் மர்மமான முறையில் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடி அருகே பூதப்பாண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குத்தரப்பாஞ்சான் வனப்பகுதியில் 13 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரக வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை கைப்பற்றினர். யானையின் உடலை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த யானை இறந்து 3 நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அது நோய்வாய்பட்டு இறந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x