Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை கைப்பற்று வதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 11 இடங்களை திமுகவும், 4 இடங் களை அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், ஒரு சுயேட்சை வேட் பாளரும் வெற்றிபெற்றனர்.
இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், வெற்றி பெற்ற 18 கவுன்சிலர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்ற பிறகு அனைவரும் ஒற்றுமையாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
18 கவுன்சிலர்களில் 11 இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ள திமுக கவுன்சிலர்களில் ஒருவர் ஒன்றியக்குழுத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது வார்டில் வெற்றிபெற்ற ஜோலார் பேட்டை எம்எல்ஏ தேவராஜியின் மருமகள் காயத்ரி பிரபாகரனுக்கும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான திமுக பிரமுகர் பாரி என்பவரின் மனைவியான 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதாபாரிக்கும் இடையே ஒன்றியக் குழுத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வந்தது.
இது தொடர்பாக, இரு தரப் பினரும் தனித்தனியாக பிரிந்து வெற்றிபெற்ற கவுன்சிலர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, காயத்ரி பிரபாகரனுக்கு ஆதரவாக 5 கவுன்சிலர்களும், சங்கீதாபாரிக்கு ஆதரவாக 6 கவன்சிலர்களும் உள்ளனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியும், தன்னை சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடித்த திமுக எம்எல்ஏ தேவராஜியின் மருமகள் காயத்ரிபிரபாகரன் ஒன்றியக்குழுத் தலைவராக வரக்கூடாது என்பதால், ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 4 அதிமுக கவுன்சிலர்களும், சங்கீதாபாரிக்கு ஆதரவு தெரி விக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால், காயத்ரிபிரபாகரன் பக்கம் உள்ள 5 கவுன்சிலர் களும் தனக்கு ஆதரவு அளிக்கா விட்டாலும், அதிமுக, பாமக மற்றும் ஒரு சுயேட்சை கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என சங்கீதாபாரி காத்திருந்தார்.
ஆனால், ஒவ்வொரு கவுன் சிலருக்கும் ரூ.25 முதல் 30 லட்சம் வரை பேரம் பேசிய தேவராஜ் தரப்பினர், எதிர்தரப்பு கவுன்சிலர்களை கடத்திச்செல்ல திட்டமிட்டனர். அதன்படி, பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திமுக, அதிமுக கவுன்சிலர்களை தங்களுடன் வருமாறு கையை பிடித்து தேவராஜ் தரப்பினர் இழுத்தனர். இதைக்கண்ட சங்கீதாபாரி தரப்பினரும் பதிலுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை தங்கள் பக்கமாக இழுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பானது.
பொதுமக்கள், காவல் துறை யினர் முன்னிலையில், திமுக கவுன்சிலர்கள் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
திமுகவினர் ஒன்றிய கவுன்சிலர் களை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களது வாகனங்களில் ஏற்றிச் செல்ல முயன்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே, வேறு வழியின்றி காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இறுதியாக, காயத்ரிபிரபாகரன் தங்களது ஆதரவாளர்களுடன் தனி வாகனத்திலும், சங்கீதாபாரி தரப்பினர் தங்களது ஆதரவாளர் களுடன் தனிவாகனத்திலும் அங் கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.
கவுன்சிலர்களை வலுக் கட்டாயமாக இழுத்து வாகனங் களில் ஏற்றும் போது ஒரு சில பெண் கவுன்சிலர்கள் கீழே விழுந்து லேசாக காயமடைந்தனர். தனித்தனி வாகனங்களில் கடத்தப்பட்ட திமுக கவுன்சிலர்கள் திருவண்ணா மலை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை (22-ம் தேதி) மறைமுக தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி கவுன்சிலர்களுக்கு தடபுடலாக கவனிப்பும் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT