Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

தென்காசியில் பதற்றமான பகுதிகளில் எஸ்பி ஆய்வு :

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பதற்றமான பகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் ஆய்வு செய்தார்.

கடையநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி, மங்களாபுரம், கண்மணியாபுரம், வலசை, பாலஅருணாசலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அனைத்து வாக்குச்சாவடி களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளதாகவும் , பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் எஸ்பி கூறினார்.

மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளம், இருமன்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடை பெற்றது. இதில் கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான போலீஸார் கலந்து கொண்டனர்.

மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்குகளை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது என்றும் எஸ்பி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x