Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 2-வது நாளாக - காவல்துறை கொடி அணிவகுப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி 2-வது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உத்தரவின்படி சிவந்திப்பட்டி, திருநெல்வேலி தாலுகா, சீவலப்பேரி, கங்கை கொண்டான், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் மங்கம்மாள் சாலையில் தொடங்கிய அணிவகுப்பு தாலுகா காவல் நிலையம் வரை நடைபெற்றது. அணிவகுப்பில் பயிற்சி டிஎஸ்பிக்கள் உட்பட 150 போலீஸார் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x