Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

7 நாட்கள் மதுக்கடைகள் மூடல் :

திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி இரவு 12 மணிவரையிலும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 7-ம் தேதி காலை 10 மணி முதல் 9-ம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 12-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x