Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது :

சிவகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோயில் பீட் பகுதியில் உள்ள ராசிங்கபேரி கண்மாயில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த கும்பலை சுற்றி வளைத்தனர். வனத்துறையினரைப் பார்த்ததும் அவர்களில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் மட்டும் பிடிபட்டனர்.

விசாரணையில் அவர்கள், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (23), மகேஷ் (19), குருவையா (32) என்பது தெரியவந்தது. இவர்கள், ராசிங்கபேரி கண்மாய்க்கு அடிக்கடி சென்று பழங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து புள்ளிமான், சருகுமான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டை யாடியது தெரியவந்தது. 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

வேட்டையாட பயன்படுத்திய அரிவாள், நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x