Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

வி.எம்.சத்திரத்தில் - குறுங்காடு வளர்ப்பு திட்டம் :

பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் மூர்த்திநாயனார் குளம் வடமேற்கு கரையில் குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

மூர்த்தி நயினார் குளத்தின் வடமேற்கு கரையில், 5,040 அடி பரப்புள்ள இடத்தில் குறுங்காடு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு 5 அடிக்கு ஒரு மரம் வீதம் 151 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், தனிவட்டாச்சியர் செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர். ராஜு, முன்னாள் கவுன்சிலர் தானேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழி லதிபர் கே.ஆர்.ராஜுவின் ஒத்துழைப் புடன், மக்களின் பங்களிப்போடு குறுங்காடு வளர்ப்பு திட்ட பணிகளை வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப் பினர் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x