Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM

மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை :

திருநெல்வேலியில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு மனித உரிமை மீறல் புகார்கள், வழக்குகள் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தினார். திருநெல்வேலி டவுன் பாறையடி ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த தங்கம்மாள் (45), இறந்த தனது மகனுக்கு நீதி கேட்டு முறையிட்டார்.

தனது மகன் வெங்கடேஷ் மீது பேட்டை குற்றப்பிரிவு போலீஸார் பொய் வழக்கு பதிந்துள்ளதாக புகார் தெரிவித்தார். கடந்த 20.2.2018-ம் தேதி வெங்கடேஷ் சிறையில் இருந்தபோது, திருப்பணிகரிசல்குளம் பகுதியில் நகையை திருடியதாக பேட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். சிறையில் இருந்து வந்தவரை அடித்து துன்புறுத்தியதால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று மனித உரிமை ஆணையத்தில் தங்கம்மாள் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இதுபோல பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x