Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

செல்போன் கடைகளில் திருடிய மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது :

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து கடைகளில் திருட்டுபோனது. முத்துசாமி (35) என்பவரது கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை திருடினர். மேலும், முகமது யூசுப் (44) என்பவரது கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், ரூ.3 ஆயிரம் திருடினர். மேலும், மற்றொரு கடையில் பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதுகுறித்த புகார்களின்பேரில், புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேக நபர்கள் குறித்த விவரம் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், மதுரை சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி (20), ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சுகுமாரன் (26), தெற்கு அரசரடி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (21) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x