Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM

பெரியார் விருதுக்குவிண்ணப்பிக்கலாம் :

திருநெல்வேலி/ தூத்துக்குடி

திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு, தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2021-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரிய விருதாளரை தேர்ந் தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் விண்ணப்பிக்கலாம். சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அக்.31 -ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x