Published : 30 Aug 2021 03:16 AM
Last Updated : 30 Aug 2021 03:16 AM

விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் ரத்து :

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செப்டம்பர் 1-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இம்மாதத்துக்காக விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x