Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM
ஏற்காடு ஏரி படகுதுறையில் படகு சவாரி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதிய கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று முதல் பழைய கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும், கடந்த 23-ம் தேதி முதல் ஏற்காடு படகுதுறையில் படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அதேநேரம் படகு சவாரிக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.
புதிய கட்டணத்தின்படி வார நாட்களில் 2 இருக்கை கொண்ட மிதி படகுகளுக்கு ரூ.150, 4 இருக்கைகள் கொண்ட மிதி படகுகளுக்கு ரூ.200, 3 இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.150, 5 இருக்கை துடுப்புப் படகுகளுக்கு ரூ.200, 8 இருக்கை விசைப்படகுக்கு ரூ.600 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
இதனிடையே, கட்டண உயர்வுக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நேற்று முதல் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, பழைய கட்டணமான வார நாட்களில் 2 இருக்கை மிதி படகுகளுக்கு ரூ.150-ம், 4 இருக்கை மிதி படகுகளுக்கு ரூ.200, மற்றும் 3 இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.130, 5 இருக்கை துடுப்புப் படகுகளுக்கு ரூ.170, 8 இருக்கை விசைப்படகுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT