Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது :

பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக புதுப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மினிலாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மினிலாரியை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர்கிராமத்தை சேர்ந்த கார்த்தி (20) என்பதும் தெரிய வந்தது. போலீஸார் கார்த்தியை கைது செய்தனர். மேலும் மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x