Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM
திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்களின் வருங்கால வைப்புநிதி பணம் ரூ. 3 கோடி கையாடல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகரத்தில் தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் உள்ளிட்ட 1,500 தினக்கூலி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில், கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து மொத்தமாக ரூ.3 கோடி பணம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இது தொடர்பான கணக்கு விவரங்களும் மாநகராட்சியில் இல்லை என்று தெரியவந்ததை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2019 – 2020-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி, பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், படிப்படியாக சில தினங்களிலேயே மீதமுள்ள தொகையையும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT