Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் தேர்வுக்கு - முதல்வருக்கு சிதம்பரம் வட்ட ஐக்கிய ஜமாத் பாராட்டு :

கடலூர்

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக அப்துல்ரஹ்மானை தேர்வு செய்த தமிழக முதல்வருக்கு சிதம்பரம் வட்ட ஐக்கிய ஜமாத் பாராட்டு தெரிவித்துள்ளது.

சிதம்பரம் வட்ட ஐக்கிய ஜமாத்தின் தலைவர் செல்லப்பா என்ற முகமதுஜியாவுதீன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

தமிழக முஸ்லிம்களின் வக்ப் சொத்துக்களை பாதுகாக்கும், பராமரிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பான தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் எம்பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத்தலைவராக உள்ள எம். அப்துல்ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகவும் பொருத்தமான, தகுதி வாய்ந்த சமூக சேவகரை தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக தேர்வு செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிதம்பரம் வட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் மற்றும் வக்ப் வாரியஉறுப்பினர்களுக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் வக்ப் வாரியசொத்துக்களில் ஆக்கிரமித்துள் ளதை மீட்டு, அந்த சொந்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி அதன் மூலம் அதிக வருவாயை உருவாக்கி சமுதாயத்தின் ஏழை,நலிவடைந்த பயன் பெற எந்த நோக்கத்துக்காக முன்னோர்க ளால் இந்த சொந்துக்கள் வக்ப் வாரிய சொத்துக்களாக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை வக்ப் வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான் மற்றும் உறுப்பினர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என்றநம்பிக்கையோடு வாழ்த்துக் களையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வக்ப் வாரிய சொத்துக்களில் ஆக்கிரமித்துள்ளதை மீட்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x