Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.18.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல் :

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வழங்கினார். 7 பேர் குடும்பத்துக்கு ரூ.7,13,000 மதிப்பில் விபத்து மரணத்துக்கான உதவித்தொகை ஆணை, 8 பேர் குடும்பத்துக்கு ரூ.1,84,000 மதிப்பில் இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ஆணை, 2 பேருக்கு திருமண உதவித்தொகை ரூ.10,000, 31 பேருக்கு கல்வி உதவித்தொகை ரூ.60,500, 879 பேருக்குதலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.8,79,000 ஓய்வூதியத்துக்கான ஆணை, என மொத்தம் 927 பேருக்கு, ரூ.18,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தொழிலாளர் துணை ஆணையர் சுடலைராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு) மணிகண்டபிரபு, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிவ பத்மநாதன், செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x