Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM

ஆலங்குளம் அருகே பெண் கொலை :

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் பொன்ராஜ் (28), தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் (30) . இவர் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது முதல் கணவரை பிரிந்து விட்ட நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதத்துக்குமுன் பொன்ராஜை 2- வது திருமணம் செய்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்தார். காலை 10 மணியளவில் திடீரென்று சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். வீட்டின் முன்பக்க அறையில் சங்கீதா கொலை செய்யப்பப்டடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், வீரகேரளம்புதூர் எஸ்ஐ காஜா முகைதீன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், சங்கீதாவை அவரது முதல் கணவர் கண்ணன் அரிவா ளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ஓடி விட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வருகின் றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x