Published : 14 Jul 2021 03:15 AM
Last Updated : 14 Jul 2021 03:15 AM

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு - மேலப்பாளையத்தில் களைகட்டிய ஆடுகள் விற்பனை : சந்தை திறக்காத நிலையில் வியாபாரிகள் திரண்டனர்

மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை அருகே ஆடுகளை விற்கவும், வாங்கவும் சமூக இடைவெளியின்றி திரண்டிருந்த வியாபாரிகள்

திருநெல்வேலி

திருநெல்வேலி மேலப்பாளையத் தில் கால்நடை சந்தை திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகள் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது. பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் எட்டயபுரம், மேலப்பாளையம் ஆட்டுச்சந்தைகள் பிரசித்தி பெற்றவை. மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி கால்நடை சந்தை வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்று வந்தது. ரூ.2 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும். இதற்காக திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் திங்கள்கிழமை இரவிலேயே விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வருவர்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதத்திலிருந்து இந்த சந்தை மூடப்பட்டு, கால்நடை கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக சந்தை திறக்கப்படாததால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வுகள் வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கால்நடை சந்தைகளை திறக்க அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் கால்நடைச் சந்தையை அதைச் சுற்றியுள்ள நேதாஜி சாலை, சக்திநகர், அன்னை கதீஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள் விற்பனை நேற்று களைகட்டியது. ஏராள மான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை வாங்கு வதற்காக ரெட்டியார்பட்டி, ஊத்துமலை, மானூர் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதி வியாபாரிகளும், இறைச்சிக் கடை நடத்துவோரும் சமூக இடைவெளியின்றி திரண்டிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x