Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா :

திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி, குறுக்குத் துறை யில் உள்ள முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு கும்பம் வைத்து, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்புப் பூஜை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x