Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படம் மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பிரேம்நாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் மணிவண்ணன், ஜெயக்குமார், விவசாய அணி மாவட்டச் செயலாளர் விஜயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விறகு அடுப்பு கூட்டியிருந்தனர்.

தென்காசி

தென்காசி தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் கவுதம், சாகுல் ஹமீது, சந்தனகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மக்கள் நீதி மய்யம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ரங்கநாதன், சேகர், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x