Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசை கண்டித்து திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி

பழங்குடியினருக்காக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி சிறைக் காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் சுடலைராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா ளர் சங்கரபாண்டியன், மனித உரிமை செயற்பாட்டாளர் வழக் கறிஞர் பிரிட்டோ உள்ளிட்டோர் பேசினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் ராஜா, மதிமுக மாநகரச் செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அகமது இக்பால் உள்ளிட்டோர் கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x