Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஆதிலிங்க பெருமாள் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பொறுப்பாளர் விஜி வேலாயுதம், பகுதி செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் யு.சந்திரன் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை எஸ்.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உட்பட பலர் பங்கேற்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT