Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் - ஊரடங்கு விதிமுறை மீறியதாக175 வழக்குகள் பதிவு :

ஈரோடு

ஊரடங்கு விதிமுறை மீறியது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 175 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 623 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 101 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 175 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 142 இருசக்கரவாகனங்களும், 6 நான்கு சக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன்படி நேற்று ஒரே நாளில் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ-பாஸ் பெற்று முறையாக வந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x