Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM
தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற சிதம்பரம் நகராட்சி பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பாராட்டு விழா நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வில் 8-ம் வகுப்பு மாணவன் சரவணன் வெற்றி பெற்றார். அவருக்கு பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயக்கொடி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டேங்க் சண்முகம் பங்கேற்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT