Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு :

திருச்சி

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராம்கி(22). இவர் கடந்த 15-ம் தேதி, பிளஸ் 2 மாணவி ஒருவரை கடத்திச் சென்று, தலையில் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பெற்றோர் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவருக்கு கிருபாகரன் (19) என்பவர் உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் ராம்கி, கிருபாகரன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x