Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM

தென்காசி எம்பி ஆய்வு :

பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 25 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார் ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேவைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அரியப்பபுரம் ஊராட்சி அலுவலகத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செட்டியூரிலும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x