Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM
சேலம் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனைக்கு தினசரி புறநோயாளிகள் பிரிவுக்கு கரோனா அறிகுறியுடன் 900 முதல்1,000 பேர் வருகின்றனர். இவர்களில் 100 முதல் 130 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். மற்றவர்களுக்கு எந்தளவு பாதிப்பு இருக்கிறது என்பதை மருத்துவர் குழுவினர் மூலம் அறிந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், லேசாக பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறியுடன் இருப்பவர்கள் என பிரித்து அவர்களை ஒவ்வொரு இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதன் மூலம் கூட்ட நெரிசலையும், நோயாளிகள் காத்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்களில், 20 சதவீதம் பேருக்கு தான் மருத்துவமனையில் சிகிச்சை தேவை. 30 சதவீதம் பேர் கரோனா ஆற்றுப்படுத்தல் மையங்களில் சிகிச்சை பெற முடியும். நுரையீரல் பாதிப்பு ஏற்படாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
சேலம் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கள் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சேலம் அரசு மருத்துவ மனைக்கு 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 70 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 10 வென்டிலேட்டர்கள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT