Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM

கோடை உழவுக்கு இயந்திரங்கள் இலவசம் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யால் டாபே டிராக்டர் நிறுவனம் மூலம் விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள 2 ஏக்கர் நிலம் வரை இலவசமாக உழவுப்பணி மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் அல்லது முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x