Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து அமைக்கப் பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை தென்காசி ஆட்சியர் சமீரன் பார்வை யிட்டார்.

தென்காசி அருகே  ராம் நல்லமணி யாதவா அறிவியல் கலைக்கல்லூரியில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், எம்எல்ஏ பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x