Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM

கரோனா பாதிப்பால் கணவர் உயிரிழப்பு அதிர்ச்சியில் மனைவி தற்கொலை :

ஈரோடு

பவானி அருகே கரோனா பாதிப்பால் கணவர் உயிரிழந்ததையடுத்து, மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி சம்தாவதி (58). ஆப்பக்கூடலில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வந்தனர். இவரது மகன் யுவராஜ் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.

கோவையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், 18-ம் தேதி சம்தாவதி ஆப்பக்கூடல் திரும்பினார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று உறுதியானது. இதனால், மனமுடைந்த சம்தாவதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மற்றொருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி, கேத்தாநாயக்கனூரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (55). இவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று முன் தினம் மாயமான பரமேஸ்வரன், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார். அந்தியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x