Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM

நெல்லையில் 632 பேருக்கு கரோனா தொற்று :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத் தில் கரோனா தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்து ள்ளது. நேற்று ஒரே நாளில் 632 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. திருநெல் வேலி மாநகரில் 187 பேர், அம்பாசமுத்திரம்- 76, மானூர்- 37, நாங்குநேரி- 13, பாளையங் கோட்டை- 60, பாப்பாகுடி- 21, ராதாபுரம்- 66, வள்ளியூர்- 96, சேரன்மகாதேவி- 52, களக்காடு- 24 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 5 பேர் மரண மடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத் தில் நேற்று 930 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ள்ளது. 13 பேர் மரண மடைந்த னர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்து தல் என மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 506 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 346 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 242 பேர் குணமடைந்தனர். 2 பேர் தொற்றால் உயிரிழந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x