Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

திருச்சி-ராமேசுவரம், கோவை-நாகர்கோவில் ரயில்கள் பயணிகள் வருகை குறைவால் ரத்து :

மதுரை: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைவால் (வண்டி எண் 06849) திருச்சி-ராமேசுவரம் சிறப்பு ரயில், (வண்டி எண் 06850) ராமேசுவரம்-திருச்சி சிறப்பு ரயில் ஆகியவை மே 19 முதல் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன. மே 20 முதல் ஜூன் 1 வரை (வண்டி எண் 02667) நாகர்கோவில்-கோவை இரவு நேர சிறப்பு ரயில் மற்றும் மே 19 முதல் 31 வரை (வண்டி எண் 02668) கோவை-நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x