Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

தஞ்சையில் 897 பேருக்கு கரோனா: மத்திய மண்டலத்தில் : ஒரேநாளில் 26 பேர் உயிரிழப்பு :

திருச்சி

மத்திய மண்டலத்தில் நேற்று ஒரேநாளில் கரோனா தொற்றாளர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 813 பேருக்கும், தஞ்சாவூரில் 897 பேருக்கும், திருவாரூரில் 302 பேருக்கும், நாகையில் 211 பேருக்கும், கரூரில் 291 பேருக்கும், புதுக்கோட்டையில் 236 பேருக்கும், பெரம்பலூரில் 141 பேருக்கும், அரிய லூரில் 112 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தில் 625 பேர், கரூரில் 224, திருவாரூரில் 271, தஞ்சாவூரில் 428, நாகையில் 170, புதுக்கோட்டையில் 166, பெரம்பலூரில் 36, அரியலூரில் 86 என 2006 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

26 பேர் உயிரிழப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 10, அரியலூரில் 1, நாகப்பட்டினத்தில் 5, தஞ்சாவூரில் 7, திருவாரூரில் 3 என 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x