Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,018 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கோடை மழை காரணமாக, கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1,439 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,018 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.63 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 97.68 அடியானது. நீர் இருப்பு 61.87 டிஎம்சி-யாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT