Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டு சிறை :

ஈரோடு

பவானிசாகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது.

இந்த வழக்கு விசாரணை, ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x