Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM
திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
ஏப்.12 முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருச்சி மாநகரில் நேற்று காலை 6.50 மணியளவில் மிதமாக தொடங்கி, காலை 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால், கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமையால் வாடி வதங்கிய மாநகர மக்கள், குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
அப்போது, திருவிளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜேந்திரன் என்பவரின் வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகள் மின்னல் பாய்ந்து உயிரிழந்தன.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்ட நிலையில் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம், கரூர், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதியம் பலத்த சூறைக்காற்றுடன் 30 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், வடகாடு, அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் சற்று உஷ்ணம் தணிந்து இருந்தது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT