Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தேரோட்டம் ரத்து :

திருச்சி

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் நடைபெறும் சித்திரை தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்.14-ம் தேதி (நாளை)நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி, அக்னிசட்டி எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பக்தர்கள் அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை கோயிலிலும்...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, திருக்கல்யாணம், செட்டிப்பெண் மருத்துவம் மற்றும் சித்திரை தேர்த் திருவிழா ஆகியவை கரோனா பரவலை தடுக்கும் வகையில் நிகழாண்டு ரத்து செய்யப்படுகின்றன. தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x