Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

சேலத்தில் வெவ்வேறு விபத்தில் - ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழப்பு :

சேலம்

சேலத்தல் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் குறிச்சி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் கார்த்திகேயன் (40) ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சக்தி. இவர்களுக்கு நித்யபிரியா (10), மவுலீஸ் (7) என்ற குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் விடுப்பில் சேலம் வந்துள்ளார். நேற்று முன்தினம் (8-ம் தேதி) அவரது சகோதரர் மணிமாறனுடன் (41) அரியானூரில் உள்ள ராணுவ கேன்டீனுக்கு சென்று, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.

சேலம் சன்னியாசிகுண்டு பை-பாஸ் சாலையில் சென்றபோது, பரமத்திவேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கோரைப்பாய் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் ராணுவ வீரர் கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

சேலம் அஸ்தம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார் (45). இவரது மனைவி வித்யா (40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் அஸ்தம் பட்டிக்கு சிவக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் சிவக்குமார் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x