Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். வேனில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், ஒட்டக்கல் பகுதியைச் சேர்ந்த பிரபு (33) என்பவர் ஆயில் வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரத்துக் காக ரூ.70 ஆயிரம் கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. பணத்துக்கான முறையான ஆவணம் இல்லாததை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஆத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் துரை, உதவி அலுவலர் வரதராஜனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT