Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக - தஞ்சை, திருச்சி, புதுகையில் ஆர்ப்பாட்டம், மறியல் :

தஞ்சாவூர்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ் சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று விவசாயி கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 100-வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத் தியும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங் கிணைப்புக்குழு சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க(இந்திய கம்யூ) மாவட்டத் தலைவர் வீரமோகன் பேசினர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், ஏஐடி யுசி, சிஐடியு, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந் தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் தலைவர் ஜீவபாரதி தலைமை வகித்தார்.

திருச்சியில்...

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-வது நாளாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதர வாக திருச்சி பிஎஸ்என்எல் மண்டல பொது மேலாளர் அலுவலகத் தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடை பெற்றது. போராட்டத்துக்கு, சங் கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இதில், வேளாண் சட்டங்களால் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, அதற்கு அடையாளமாக எலும்புக் கூடுகளை பிரதமர் மோடிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப விவசாயிகள் முயன்றனர். இதைப் போலீஸார் தடுத்ததால், அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர், அலுவலகத்துக்கு வெளியே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 85 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித் தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x