Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
சேலம் திருவாக்கவுண்டனூரில் லோகேஷ் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை அவரது கடையில் தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பாக சூரமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர். கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT