Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
சேலத்தில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழந்தார்.
சேலம் ஆட்டுக்காரனூரைச் சேர்ந்தவர் முகமது மீரான் (53). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஞ்சா வழக்கு தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT