Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM

புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,730-ஆக உயர்ந் துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,607-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கூட நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதால், பாதிப்பு எண்ணிக்கை 7,570-ஆகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 19,357-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற் றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 19,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x