Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, சேலத்தில் தங்கியிருந்த முதல்வரை கிராம மக்கள் சந்திக்க வந்தனர்.
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பூமிரெட்டிப்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இருந்த முதல்வர் பழனிசாமியை சந்திக்க வந்தனர். முதல்வர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால், கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் கிராம மக்கள் கூறும்போது, “பூமிரெட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்யக் கோரியும், இலவச வீட்டு மனை கோரியும் சேலம் ஆட்சியர் மற்றும் முதல்வர் சுற்றுப்பயணத்தின்போதும் மனு கொடுத்ததாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT