Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது தந்தை 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். தாயாருடன் வசிக்கிறார். கடந்த 25-ம் தேதி நல்லூரில் நடந்த தீபத் திருவிழாவுக்கு அவரது தாயார் சென்ற நிலையில், தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சக்தி (50) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் சக்தியைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT