Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM

தமிழ்நாடு வேளாண் ஒப்பந்த சட்டத்தை ரத்து செய்ய வழக்கு

மதுரை

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஒப்பந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைச் சட்டம்-2019 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு விவசாயி நேரடியாக தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒப்பந்த தாரர் விரும்பிய இடத்தில் முகாம் அமைத்து அவர்களது விலைக்குக் கொள்முதல் செய்ய முடியும். அதே நேரத்தில் விவசாயத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.

விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நேரடி யாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய்க் கோட்டக் குழுவின் மூலமே தீர்வு காண முடியும்.

இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்.

நாட்டிலேயே முதன்முறையாக தமி ழகத்தில்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, விவசாயி களின் நலன் கருதி தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந் தச் சட்டம்-2019 அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அந்தச் சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகி யோர் விசாரணையை தள்ளி வைத்த னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x