Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை

மைசூர் - தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் டிச.31 வரையிலும், தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஜன.1-ம் தேதி வரையிலும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பயணிகளின் வசதிக்காக மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.1 முதல் 30-ம் தேதி வரையிலும், தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஜன.2 முதல் 31-ம் தேதி வரையிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை (டிச.23) முதல் மைசூர் - தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.30 மணிக்குப் பதிலாக காலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 7.35 மணிக்குப் பதிலாக 7.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக 8.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 9.10 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து 10.05 மணிக்குப் பதிலாக 10 மணிக்கும் புறப்பட்டு முற்பகல் 11.15 மணிக்குப் பதிலாக முற்பகல் 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்குப் பதிலாக மாலை 4.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 5.07 மணிக்குப் பதிலாக 5.02 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.30 மணிக்குப் பதிலாக 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.45 மணிக்குப் பதிலாக 7.50 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.10 மணிக்கும் புறப்படும் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x