Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்க பணியாளர்கள் எதிர்ப்பு

மதுரை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 7-வது வட்டக் கிளைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கிளைத் தலைவர் கே.முருகன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் ரா.தமிழ், மாவட்டத் தலைவர் டி.மனோகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் வி.முத்துராமன் நன்றி கூறினார்.

இதில், சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x