Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கட்சியினர்.

மதுரை: சமையல் எரிவாயு விலையை ஒரே மாதத்தில் ரூ.100 உயர்த்தியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் காலி சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆண்டிச்சாமி, தவமணி, கவுசல்யா, புருசோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x