Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

ரூ.3.50 லட்சம் முறைகேடு பெற்றோர், மகன் மீது வழக்கு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாயகி (56). இவரை 2019 நவம்பரில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன், அவரது மனைவி ஷகிலா, மகன் விஜயஆனந்த் ஆகியோர் அணுகினர். அப்போது, ரெங்கநாயகியின் மகனுக்கு கால் நடைத் துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பிய ரெங்க நாயகி அவர்களிடம் ரூ.3.50 லட்சம் கொடுத்தார். ஆனால், பேசியபடி கால்நடைத்துறையில் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை பலமுறை கேட்டும் திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக ரெங்கநாயகி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷகிலா, அவரது மகன் விஜய் ஆனந்த், கணவர் ராஜ்மோகன் ஆகியோர் மீது முறைகேடு வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x